6/15/08

தசாவதாரம் - பத்து கருத்துகள்

1. பன்னிரெண்டாம் நூற்றாண்டு கதை ஒரு அருமையான ட்ரைலர் போன்று இருந்தது. இதை வைத்து இதே ப்ரம்மாண்டத்துடன் ஒரு படம் எடுக்கவும். தயவு செய்து அசினை மட்டும் தூய தமிழில் பேசி நடிக்க வைக்க வேண்டாம்.
2. மேற்சொன்ன ட்ரைலர் படத்தில் ஏன் வந்தது ? மற்ற கதைக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லையே ? முக்கிய கதையில் ஒரு வேடம் குறைந்ததோ? Labல் செத்துப் போகும் குரங்கு வேஷம் போட்டிருக்கலாமே?
3. சில வேஷங்கள் மிகவும் செயற்கையாக இருந்தன - ஆனால் போகப்போகப் பழகி விட்டன.
4. 95 வயது பாட்டி பிரமாதம்.
5. ரஜினியைப் போல் ஜப்பானியர்களின் மனதில் இடம் பிடிக்கவோ என்னமோ - ஒரு ஜப்பானியர் வேடம். கடைசி சண்டை அருமை.
6. தெலுங்கர் வேடம் தெலுங்கர்கள் தமிழ் பேசுவதையும் - பொதுவாக அவர்களை கிண்டல் செய்து அதில் காமெடி கண்டது. ஹிந்தி படங்களில் தமிழர்களை கிண்டல் செய்யும்போது எனக்கு வரும் கோபம் தெலுங்கு பேசும் நண்பர்களுக்கு இந்த படம் பார்த்து ஏன் ஏற்படக் கூடாது என்று தோன்றியது. பஞ்சாபி வேடத்தில் இந்த ப்ரச்சனை இல்லை.
7. கேன்சருக்கு நல்ல treatment - குறி பார்த்து கேன்சர் இருக்கும் இடம் பார்த்து சுடுவது என்று இந்த படம் பார்த்து தெரிந்து கொண்டேன்.
8. மல்லிகா செராவத்தை இடைவேளைக்கு முன்பே கொன்றிருக்க வேண்டாம். கால்ஷீட் ப்ரச்சனையோ?
9. நல்லவேளையாக நாத்திக திணிப்புகள் அதிகம் இல்லை.
10. லட்சக்கணக்கான பேரை பலி வாங்கிய சுனாமி வராமல் இருந்தால் கோடிக் கணக்கான பேர் இறந்திருப்பார்களோ என்ற படைப்பாளனின் யோசனை வித்யாசமானது.

No comments: