Showing posts with label விநாயகர். Show all posts
Showing posts with label விநாயகர். Show all posts

11/19/07

நவசக்தி விநாயகர்

இன்று காலை மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகில் உள்ள நவசக்தி விநாயகர் கோவிலுக்குச் சென்றிருந்தோம். நல்ல தரிசனம். அப்பொழுது தோன்றிய கவிதை இங்கே. பல முறை யோசித்தும் நான்கு வரி கவிதை ஆக்குவதற்கு முதல் இரண்டு வரிகள் சரியாக அமையவில்லை. எனவே தோன்றிய இரண்டு வரிகளைக் கொண்டு குறள் வெண்பாவாக எழுதியுள்ளேன். முதல் இரண்டு அடி உங்களுக்குத் தோன்றினால் பின்னூட்டத்தில் கொடுக்கவும்.

கவிதை இதோ:

தவசக்தி வித்யை பெறவே தொழுதேன்
நவசக்தி நாயகன் தாள்.