Showing posts with label அண்ணா. Show all posts
Showing posts with label அண்ணா. Show all posts

12/21/07

அண்ணா பல்கலைக்கழகமா - திரைப்பட நகரமா

.. என்று சந்தேகம் வரும் அளவு ஒரு காலத்தில் இருந்தது. நான் கல்லூரியில் இருந்தபோது ஒரு நாள் சன் தொலைக்காட்சியில் "ஒரு கைதியின் டைரி" படம் போட்டார்கள். கல்லூரி விடுதியில் உள்ள தொலைக்காட்சி அறையில் ஒரு பெரிய கூட்டமே கூடி பார்த்துக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரே விசில், கூச்சல். பார்த்தால் அண்ணா பல்கலைக்கழக Main buildingல் அடுத்த 10 நிமிடக் காட்சி எடுக்கப்பட்டிருந்தது. இதோ நம்ம main building entrance, அட இதோ நம்ம co-ops பக்கத்தில இருக்கும் மரப் படிக்கட்டு, இது நம்ம maths departmentஆ என்று ஒரே கூத்து தான். அதன் பின் பல பழைய (80s or 90s) படங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தைப் பார்த்து விட்டேன். அப்போதெல்லாம் court scene எடுப்பது எல்லாம் அங்குதான் போலும். உதாரணத்திற்கு நாயகன் படத்தின் இறுதிக் காட்சி.. அதில் காட்டப்படும் கோர்ட் அண்ணா பல்கலைக்கழக கட்டிடம் தான். ஆசை திரைப்படத்தில் சில காட்சிகள் கூட அங்கு எடுக்கப்பட்டது என்று கேள்வி. நல்லவேளையாக எனக்குத் தெரிந்தவரை சமீபத்தில் அங்கு திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை.

12/18/07

கல்லூரி நினைவுகள் - GK

இன்று காலை வண்டியில் வந்துகொண்டிருந்த பொழுது என்னையும் அறியாமல் பாடிய பாட்டு - " உனக்கென்ன மேலே நின்றாய்". என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்று. ஆனால் இன்று இதைப் பாடும்போது நினைவிற்கு வந்தவன் GK என்ற G Karthikeyan - என்னுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவன். எங்கள் கல்லூரியில் ஒரு விழாவில் இந்த பாடலுக்கு நடனம் ஆடினான். எங்கள் அனைவர் கண் முன்பும் சிம்லா ஸ்பெஷல் கமலை கொண்டுவந்து நிறுத்தியது அவனது நடனம்.

நடனம் என்றவுடன் Backstreet Boys உம் Michael Jacksonஉம் ஆடிய காலம் அது (இப்பொழுது எப்படி என்று தெரியவில்லை). அந்த குறுகிய வட்டத்திலிருந்து விலகி தனக்கென்று ஒரு பாணியை வைத்து ஆடினான் GK. அவன் முதன் முதல் கல்லூரியில் மேடை ஏறி ஆடியது ஒரு சந்திரபாபு பாடலுக்கு. சந்திரபாபுவின் பாணியை அப்படியே கையாண்டு ஆடுவது எளிதல்ல. அதை அழகாகக் கையாண்டு ஆடியது இன்றும் நினைவில் இருக்கிறது (Fresher's party??). இது எங்கள் துறைக்குள் நடந்த விழா. கல்லூரியே பார்க்க அவன் "என்னுயிரே" (உயிரே) பாடலுக்கு ஆடினான். ஆடிய அனைவருள்ளும் தமிழ் பாடலுக்கு ஆடியது இவன் ஒருவனே என்றால் பாருங்கள். முடிவை அறிவித்த நடுவர் இவனது நடனத்தை தனியாக புகழ்ந்தார் - எனினும் முதல் பரிசை இவனுக்குக் கொடுக்காமல் அநியாயம் செய்தனர். இருந்தபோதும் ஒவ்வொரு விழாவிலும் இவனது வித்தியாசமான நடனத்தைக் காண அவனுக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் (அடியேனையும் சேர்த்து தான்).

இப்பொழுது எங்கு இருக்கிறான் என்று தெடியவில்லை. மேற்படிப்பு படிக்கும் போதும் அவனும், எங்களது இன்னொரு நண்பன் கார்த்திக்கும் சேர்ந்து நடனம் ஆடியது வரை தெரியும். அவனது திருமணத்திற்க்கும் செல்ல முடியவில்லை...

கல்லூரி நினைவுகளில் மூழ்கி நிற்கும்
-மகேஷ்