5/28/10

மஹதி

சலங்கையின் ஜல்ஜல் சொல்லுமே ஷட்ஜமம்
ரீங்காரமாய் ஒலிக்கும்உன் அழுகை ரிஷபம்
கலகலவென சிரிக்கையில் கேட்குமே காந்தாரம்
மழலையில் உதிர்த்திடும் முத்துக்கள் மத்யமம்
பாதங்கள் பூமியில்படப் பாடுமே பஞ்சமம்
தைதையென துள்ளிகுதித் தாடையில் தைவதம்
நித்திரையில் மெல்லியதாய் நின்சுவாசம் நிஷாதம்
மொத்தத்தில்நீ நாரதன்கை வீணையின் நாதம்

பி.கு
1. நாரதரின் வீணையின் பெயர் மஹதி
2. ஷட்ஜமம் முதல் நிஷாதம் என்பவை ஸரிகமபதநி என்ற ஸ்வரங்களின் பெயர்களாகும்.

No comments: