சலங்கையின் ஜல்ஜல் சொல்லுமே ஷட்ஜமம்
ரீங்காரமாய் ஒலிக்கும்உன் அழுகை ரிஷபம்
கலகலவென சிரிக்கையில் கேட்குமே காந்தாரம்
மழலையில் உதிர்த்திடும் முத்துக்கள் மத்யமம்
பாதங்கள் பூமியில்படப் பாடுமே பஞ்சமம்
தைதையென துள்ளிகுதித் தாடையில் தைவதம்
நித்திரையில் மெல்லியதாய் நின்சுவாசம் நிஷாதம்
மொத்தத்தில்நீ நாரதன்கை வீணையின் நாதம்
பி.கு
1. நாரதரின் வீணையின் பெயர் மஹதி
2. ஷட்ஜமம் முதல் நிஷாதம் என்பவை ஸரிகமபதநி என்ற ஸ்வரங்களின் பெயர்களாகும்.
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
5/28/10
சுகோஷ்
சுகோஷ் பிறந்த சில நாட்களில் எழுதிய கவிதை இது.
வேய்குழல் கீதத்தை வீணையின் நாதத்தை - உன்
வாய்மொழி அமுதத்தால் வெட்கிட வைத்தாயே
பூரணமாய் குறள் மொழியை மெய்ப்பிக்க வந்தாயே
காரணப் பெயரதனால் குரலினியன் என்னும் சுகோஷ்
வேய்குழல் கீதத்தை வீணையின் நாதத்தை - உன்
வாய்மொழி அமுதத்தால் வெட்கிட வைத்தாயே
பூரணமாய் குறள் மொழியை மெய்ப்பிக்க வந்தாயே
காரணப் பெயரதனால் குரலினியன் என்னும் சுகோஷ்
5/13/10
முப்பத்தி ஏழு, மேட்டுத் தெரு, துறையூர்
மே 8 மற்றும் 9 2010 அன்று, துறையூர் மேட்டுத் தெருவில் உள்ள எங்களின் வீட்டை எங்கள் கொள்ளுத் தாத்தா வாங்கி நூறு ஆண்டுகள் ஆகியதை வெகு விமரிசையாகக் கொண்டாடினோம். அன்றைய தினம் நான் எழுதிய கவிதை இதோ:
முப்பத்தோ றாண்டுகளாய் இன்பத்தின் முகவரி
முப்பத்தி ஏழு மேட்டுத் தெரு - அதன்
நூற்றாண்டு காணும் நன்னாளில் மனம்
காற்றாய் பறக்குது பின்னோக்கி
*துறையூர் என்றதும் நினைவில் வருவோர்
குறைதீர நவமியில் உதித்த ராமரும்
உத்திரப் பங்குனி சுப்பிர மணியரும்
இவ்விரு நாமங்கள்சேர் நாமகிரி நாயகரும்
தெய்வத் தம்பதியர் காட்டிய பாதையில்
எய்திட இலக்குகள் எண்ணிலும் அடங்குமோ?
பக்தியும் ஒழுக்கமும் புத்தகத்து வார்த்தையல்ல
நித்தமும் வாழ்வினை நடத்துகின்ற வழியென
சொற்களால் அன்றி தம் செய்கையால் காட்டிடும்
சுற்றங்கள் நிறைந்ததால் வீடல்ல கோவிலிது
மொட்டை மாடியில் கற்றோம் கிரிக்கெட்
கூட்டல் கழித்தல் ஐஓபி கிளைகளில்
அஞ்சாமல் நீச்சல் சுரைகுடிக்கை இடுப்பில்
சிந்தாமல் பறிமாற சீதாகல்யாணப் பந்தி
குடத்தில் தண்ணீர் கொணர்ந்து பழக்கம்
நடனப் பயிற்ச்சிக்கு திவ்ய நாமம்
கத்திப் பேசவும் கொண்டோம் வழக்கம்
மொத்தத்தில் இதுஒரு பல்கலைக் கழகம்
வீடல்ல இதுஒரு ஆல விருட்சம்
வேர்களின் வயதின்றி நூறு வருஷம்
விழுதகளாம் நாங்கள் ஓர்உறுதி எடுப்போம்
வேர்சென்ற பாதையைத் தொடர்ந்து நடப்போம்.
* - எங்கள் தாத்தா, பாட்டி - ராமசுப்பிரமணிய ஐயர் மற்றும் நாமகிரி அம்மாள் - 25 ஆண்டுகளாக இந்த இல்லத்தில் ராமநவமி உற்சவமும், பங்குனி உத்திர உத்சவமும் நடத்தினர்.
முப்பத்தோ றாண்டுகளாய் இன்பத்தின் முகவரி
முப்பத்தி ஏழு மேட்டுத் தெரு - அதன்
நூற்றாண்டு காணும் நன்னாளில் மனம்
காற்றாய் பறக்குது பின்னோக்கி
*துறையூர் என்றதும் நினைவில் வருவோர்
குறைதீர நவமியில் உதித்த ராமரும்
உத்திரப் பங்குனி சுப்பிர மணியரும்
இவ்விரு நாமங்கள்சேர் நாமகிரி நாயகரும்
தெய்வத் தம்பதியர் காட்டிய பாதையில்
எய்திட இலக்குகள் எண்ணிலும் அடங்குமோ?
பக்தியும் ஒழுக்கமும் புத்தகத்து வார்த்தையல்ல
நித்தமும் வாழ்வினை நடத்துகின்ற வழியென
சொற்களால் அன்றி தம் செய்கையால் காட்டிடும்
சுற்றங்கள் நிறைந்ததால் வீடல்ல கோவிலிது
மொட்டை மாடியில் கற்றோம் கிரிக்கெட்
கூட்டல் கழித்தல் ஐஓபி கிளைகளில்
அஞ்சாமல் நீச்சல் சுரைகுடிக்கை இடுப்பில்
சிந்தாமல் பறிமாற சீதாகல்யாணப் பந்தி
குடத்தில் தண்ணீர் கொணர்ந்து பழக்கம்
நடனப் பயிற்ச்சிக்கு திவ்ய நாமம்
கத்திப் பேசவும் கொண்டோம் வழக்கம்
மொத்தத்தில் இதுஒரு பல்கலைக் கழகம்
வீடல்ல இதுஒரு ஆல விருட்சம்
வேர்களின் வயதின்றி நூறு வருஷம்
விழுதகளாம் நாங்கள் ஓர்உறுதி எடுப்போம்
வேர்சென்ற பாதையைத் தொடர்ந்து நடப்போம்.
* - எங்கள் தாத்தா, பாட்டி - ராமசுப்பிரமணிய ஐயர் மற்றும் நாமகிரி அம்மாள் - 25 ஆண்டுகளாக இந்த இல்லத்தில் ராமநவமி உற்சவமும், பங்குனி உத்திர உத்சவமும் நடத்தினர்.
11/19/07
எடியூரப்பா
ஏழுநாள் ஆட்சில என்னத்தக் கண்டீக
பாழும் பதவிக்கா பித்தாட்டம் நின்னீக
ஆனமட்டும் லாபம் அரசாங்கக் காரு
போனதோ பாஜக பேரு
நவசக்தி விநாயகர்
இன்று காலை மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகில் உள்ள நவசக்தி விநாயகர் கோவிலுக்குச் சென்றிருந்தோம். நல்ல தரிசனம். அப்பொழுது தோன்றிய கவிதை இங்கே. பல முறை யோசித்தும் நான்கு வரி கவிதை ஆக்குவதற்கு முதல் இரண்டு வரிகள் சரியாக அமையவில்லை. எனவே தோன்றிய இரண்டு வரிகளைக் கொண்டு குறள் வெண்பாவாக எழுதியுள்ளேன். முதல் இரண்டு அடி உங்களுக்குத் தோன்றினால் பின்னூட்டத்தில் கொடுக்கவும்.
கவிதை இதோ:
கவிதை இதோ:
தவசக்தி வித்யை பெறவே தொழுதேன்்
நவசக்தி நாயகன் தாள்.
11/18/07
வெண்பா
இன்று என்னுடைய உறவினன் ஒருவனிடம் கூகிளிள் பேசிக்கொண்டிருந்தேன். என்னுடைய கவிதைக்கு வாழ்த்து தெரிவித்து, வெண்பா அருமை என்று கூறினான். பின்னர் அவனிடம் என்னடைய கவிதையில் கடைசி அடியில் நான்கு சீர் இருப்பதையும், வெண்பாவின் மற்ற இலக்கணங்களாகிய மா முன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நிரை ஆகியவற்றை என்னுடைய கவிதை பின்பற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டினேன். இந்த இலக்கணங்களைப் பின்பற்றி இதே கவிதையை மாற்றுவதாகவும் அவனிடம் சொன்னேன்.
வெண்பா இலக்கணம் வேண்டின் - தமிழ் விக்கிபீடியாவில் சென்று வெண்பா என்று தேடவும். இந்த பதிவிற்காக தேடியதில் இங்கு என்னுடைய வெண்பா அறிவைப் பெருக்கிக்கொள்ள முடிந்தது.
இரண்டாவது அடியில் தனிச்சொல் வராததால் இன்னிசை வெண்பாவாகவே என்னுடைய கவிதை வரும்.
இதோ அந்த வெண்பா :
இலக்கணம் (நான் சரி பார்க்க எழுதியது - இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்):
வெடியதன் - நிரை நிரை - கருவிளம்
வேகத்தைக் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - விளம் முன் நேர்
கண்டாலும் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
அஞ்சான் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
இடியதன் - நிரை நிரை - கருவிளம் - மா முன் நிரை
பேரொலியைக் - நேர் நிரை நேர் - கூவிள்ங்காய் - விளம் முன் நேர்
கேட்டாலும் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
அஞ்சான்பின் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
அஞ்சும் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
பொருளொன்று - நிரை நேர் நேர் - புளிமாங்காய் - மா முன் நிரை
உண்டென்றால் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
அன்னைதான் - நேர் நேர் நேர்- தேமாங்காய் - காய் முன் நேர்
வஞ்சித்தே - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
ஊட்டும் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
மருந்து - நிரைபு - பிறப்பு - மா முன் நிறை.
வெண்பா இலக்கணம் வேண்டின் - தமிழ் விக்கிபீடியாவில் சென்று வெண்பா என்று தேடவும். இந்த பதிவிற்காக தேடியதில் இங்கு என்னுடைய வெண்பா அறிவைப் பெருக்கிக்கொள்ள முடிந்தது.
இரண்டாவது அடியில் தனிச்சொல் வராததால் இன்னிசை வெண்பாவாகவே என்னுடைய கவிதை வரும்.
இதோ அந்த வெண்பா :
வெடியதன் வேகத்தைக் கண்டாலும் அஞ்சான்
இடியதன் பேரொலியைக் கேட்டாலும் அஞ்சான்பின்
அஞ்சும் பொருளொன்று உண்டென்றால் அன்னைதான்
வஞ்சித்தே ஊட்டும் மருந்து
இலக்கணம் (நான் சரி பார்க்க எழுதியது - இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்):
வெடியதன் - நிரை நிரை - கருவிளம்
வேகத்தைக் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - விளம் முன் நேர்
கண்டாலும் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
அஞ்சான் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
இடியதன் - நிரை நிரை - கருவிளம் - மா முன் நிரை
பேரொலியைக் - நேர் நிரை நேர் - கூவிள்ங்காய் - விளம் முன் நேர்
கேட்டாலும் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
அஞ்சான்பின் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
அஞ்சும் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
பொருளொன்று - நிரை நேர் நேர் - புளிமாங்காய் - மா முன் நிரை
உண்டென்றால் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
அன்னைதான் - நேர் நேர் நேர்- தேமாங்காய் - காய் முன் நேர்
வஞ்சித்தே - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
ஊட்டும் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
மருந்து - நிரைபு - பிறப்பு - மா முன் நிறை.
11/8/07
அஞ்சுவது அஞ்சல்
என்னுடைய தமிழ் பதிவை நான் இரு தினங்களுக்கு முன் என் மகன் சுகோஷ் பற்றி எழுதிய கவிதையைக் கொண்டு துவக்குகிறேன். நிறை-குறைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
வெடியின் வேகத்தைக் கண்டாலும் அஞ்சான் - பேர்
இடியின் ஒலியைக் கேட்டாலும் அஞ்சான் - இவன்
அஞ்சும் பொருளொன்று அவனியில் உண்டென்றால்
வஞ்சித்தே அன்னையூட்டும் அரைமூடி மருந்து.
Subscribe to:
Posts (Atom)